பாகிஸ்தானிடம் வேகாத இலங்கை பருப்புகள்




எப்படி வென்றார்கள் அல்லது எப்படி தோற்றார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் எனவே அதை பற்றி விவரிப்பதில் அர்த்தம் இல்லை.



இந்த தொடர் முழுவதும் இலங்கை அணி சார்பாக டில்சானும் மூன்று (சில வேளைகளில் நான்கு) Mகளும் மட்டுமே விளையாடினார்கள்மற்றவர்கள் எல்லைக் கோட்டில் பந்து பொறுக்கி கொடுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து பந்து பொறுக்கி கொடுத்தார்கள் அவ்வளவே.



அதிலும் முபாரக் துடுபெடுத்தாடும் நேரத்தில் அரை முட்டை கூட அவிக்க முடியாது.மனிதருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோ தெரியாது.



இந்த தொடர் முழுவதும் பல அணிகளிலும் இத்தகைய கொளரவ வீரர்கள் விளையாடினார்கள் என்ன செய்வது பதினோரு பேர் விளையாட வேண்டும் என்ற தலை எழுத்து..



பதினொருபேர் தான் விளையாட வேண்டும் என்ற தலை விதியை ICC கட்டாயம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துடுப்பாட்ட கட்டுபாட்டு சபைகளுக்குஇது பேருதவியாக இருக்கும். ஆகக் குறைந்தது விமானக் கட்டணம் மற்றும் தங்குமிட செலவுகளையாவது குறைக்கலாம்



பாவம் டில்ஷான் அற்புதமாக தொடர் முழுவதும் ஆடி வந்த மனிதரை சக்கர வியுகம் அமைத்து விழுத்தி விட்டார்கள்என்றாலும் அவரின் scoop shotகளுக்காக இந்த தொடர் என்றென்றும் நினைவு கூரப்படும்



சங்கா பாவம், எல்லோரும் நல்ல பிள்ளைகளாய் களம் அகல மனிதர் பொறுப்புடன் ஆடினார் மகேல நெற்றில் பயிற்சி செய்ததை மறக்க வில்லை போல அப்படியே அற்புதமாக களத்தில் ஆடிக் காட்டினர்.



உமர் குல்லுக்கு ஞாபகம் மறதி இருப்பது இன்றைய போட்டியின் போது தான் உணரக் கூடியதாக இருந்ததுமனிதர் திடீரெண்டு யோக்கர் போடுவது எப்படி என்பதை மறந்து விட்டார் இனி வரும் முக்கிய போட்டிகளின் போது மருந்து குளிசைகளை கையில் எடுத்து செல்வது நல்லது.



கம்ரன் அக்மல் வழமை போல் அதிரடியாக ஆடி ஒரு சிறப்பான தொடக்கத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்.



அப்ரிடிக்கு இன்றைக்கு ஆத்தா வரம் குடுத்திருப்பா போல. மற்றும் படி மனிதர் கையை சும்மா வைத்திராமல் சுழற்றி வானத்தில் பட்டம் காட்டி விட்டு வெளியேறி விடுவார். இன்றைக்கு ஏனோ அற்புதமாக ஆடினார்.



பல நாட்களுக்கு முதலே காசியில் துடுப்பாட்டத்தை தலை முழுகி விட்டு முக்கிய சுழல பந்து வீச்சாளராய் அவதாரமெடுத்த அப்ரிடி ஆத்தாவின் வரம் இல்லாமல் ஜம்பது ஓட்டங்கள் எடுத்திருக்க முடியாது.



வழமையாக கஞ்சப் பிசினரியாக இருக்கும் மென்டிஸ்க்கு இன்றைக்கு ஏனோ தாராள மனப்பான்மை வந்து விட்டது.மனிதர் கர்ண பரம்பரைக்கு தாவி விட்டார்.



கடைசியாய் இந்தியாவும் இலங்கையும் கிண்ணம் வெல்லாதது மட்டும் தான் எங்களுக்கு ஆறுதல். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு கிடைத்த தோல்விகாக சந்தோசப் படுகிறோம். என்ன செய்வது எங்களுக்கு இனி வெற்றி இல்லை என்றாகி விட்ட போது அவர்களின் தோல்விகளுக்கு மட்டுமே இனி சந்தோசப் பட முடியும்அதிலும் இந்தியா வெல்லாதது எனக்கு பெரும் மகிழ்ச்சி வென்றிருந்தால் அவர்களின் அலபறையை கேட்டே காது மென் சவ்வு கிழிந்திருக்கும்.



மற்றும் படி இந்த தொடர் தொடங்கும் போது நான் waste இண்டீஸ் (எழுத்து பிழை இல்லை துடுபாட்டத்தை பொறுத்த வரை இந்த பெயர் தான் அவர்களுக்கு பொருத்தம்)அல்லது இங்கிலாந்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று விரும்பியிருந்தேன்.அப்போது தான் அந்த நாடுகளில் சூம்பி கிடக்கும் துடுப்பாட்ட ஆர்வம் துளிர்விடும் என்பது எனது நப்பாசை.ஆனால் அவர்களோ தேநீர் கோப்பையை தவிர வேறந்த கோப்பைகளையும் கையால் தொட மாட்டோம்.என்று தலையில் கை வைத்து சத்தியம் செய்து விட்டு விளையாடுகிறார்கள்



இருபது இருபது போட்டிகளில் சுழல் பந்து வீச்சாளர்களின் முக்கியத்தை இந்த தொடர் உணர்த்தியிருக்கிறது.அதே போல் அயர்லாந்தின் எழுச்சியையும் குறிப்பிடலாம் இத்தகையை குறுகிய ஓவர்களை கொண்ட போட்டிகளில்கைப் பிள்ளைகளாலும் நல்ல விறுவிறுப்பான ஆட்டத்தை கொடுக்கலாம் என்பதை அவர்கள் நிருபித்தார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

தமிழீழத்தின் எல்லைகள்


நாடு கடந்த தமிழீழ யோசனைகளுக்கு பிறகு பலருக்கும் அதன் எல்லைகளை பற்றிய சந்தேகங்கள் எழுந்திருக்கும்.இப்போது எழுந்திருக்கும் இந்த சந்தேகங்கள் புலிகளின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கிய கால கட்டங்களில் பல வெளி நாட்டு பத்திரிகையாளர்களுக்கு இருந்தது. எம்மவர்களின் புலப் பெயர்வை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழர் பிரச்சினை அறிமுகம் ஆக தொடங்கிய கால கட்டம் அது.


அப்போது கிட்டு வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தார்அந்த கால பகுதியில் (1990 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிட்டு சுவிட்சர்லாந்தில் ஒரு கூட்டத்தில் பேசி கொண்டிருந்த போது இடை மறித்த ஒரு வெள்ளை கார நிருபர் நீங்கள் தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்று சொல்லி பேசுகிறீர்கள் இந்த தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது? இதன் எல்லைகள் என்ன? என்று கேட்டார்


இதை சற்றும் எதிர் பாராத கிட்டு ஒரு கணம் திகைத்து நின்றார் பின்னர் தன்னை சுதாகரித்து கொண்டு இப்படி பதில் அளித்தார்


'இலங்கை தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்தக் கொள்ளுங்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ எந்ததெந்த பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ எந்தெந்த இடங்களில் தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலபடுகின்றனரோ அந்தந்த இடங்களை எல்லாம் வரை படத்தில் வண்ணம் தீட்டுங்கள் முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்த பகுதி தான் தமிழ் ஈழம் அது தான் எங்கள் எல்லைகள்'


என்னை பொறுத்தவரை முள்ளிவாய்க்கல்களை முகவரியிட கிட்டு மறந்து விட்டார் புத்த பிரானின் சீடர்களின் அபாரமான பரிணாம வளர்ச்சியை (மனிதனில் இருந்து மிருகத்திற்கு) கிட்டு எதிர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.


எங்கெல்லாம் இரசாயன் குண்டுகள் விதைக்க படுகிறதோ எங்கெல்லாம் பல்குரல் குண்டு மழை பொழிகிறதோ எங்கெல்லாம் மருத்துவ மனைகள் இலக்கு வைத்து தாக்கப் படுகிறதோ எங்கெல்லாம் மனித சதை கூட்டங்கள் குவிந்து கிடக்கிறதோஅங்கெல்லாம் வண்ணம் தீட்டுங்கள் முள்ளிவாய்க்கால்கள் கிடைக்கும்


அது சரி இலங்கைக்கு வெளியே உள்ள ஈழத்தின் எல்லைகளை எப்படி

வரையறுப்பதுஉலக வரை படத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் எடுத்து கொள்ளுங்கள்


எங்கெல்லாம் குத்து வெட்டுகளும் குழிபறிப்புக்களும் நடக்கின்றனவோ எங்கெல்லாம் துரோகி பட்டங்கள் வாரி வழங்கபடுகின்றனவோ எங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்களையும் உண்ண விரதங்களையும் தொடர்ந்து கோழி புரியானிகளும் குவாட்டர்களும் பரிமாறப் படுகின்றனவோ(வீடுகளில் தான்) எங்கெல்லாம் ரத்தம் தராமல் சத்தம் மட்டுமே போட்டு கொண்டு தமிழீழ கனவுகளில் மிதக்கிறார்களோஅங்கெல்லாம் வண்ணம் தீட்டுங்கள் அதன் எல்லைகள் கிடைக்கும்


குறிப்பு: தப்பி தவறி எங்கெல்லாம் குடும்ப ஆட்சி நடக்கிறதோ எங்கெல்லாம் கோழிபிரியாணிக்கும் குவாட்டருக்கும் வாக்குகள் களவாடப்படுகிறதோ எங்கெல்லாம் திரை நட்சத்திரங்களுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பாபிசேகமும் பாலபிசேகமும் நடக்கிறதோ அங்கெல்லாம் வண்ணம் தீட்டி விடாதீர்கள் அது உலகில் இன உணர்வும் மானமும் உள்ள அரிதான மனிதர்கள் வாழ்கின்ற ஒரு இடத்தை உங்களுக்கு காட்டும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

எங்கள் தாயகத்தின் தற்போதைய யதார்த்த நிலை உணர்ந்து எடுக்க பட்ட மிகச் சிறந்த முடிவாக நான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டத்தை கருதுகிறேன்.
எங்கள் அரசியல் சுதந்திரங்களை முன்னெடுக்க ஒரு கூட்டு அரசியல் சார்ந்த பொது கட்டமைப்பு இலங்கைக்கு வெளியே உருவாக்க படுவதன் தேவை இப்போது தான் உணரபட்டிருக்கிறது.
சிங்களவர்களிடம் இருந்து, தனித்து ஆயுதப் போரட்டம் செய்தோ அல்லது ஜனநாயக வழியாக போராடியோ எங்கள் சுதந்திரத்தை வென்றடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை நாங்கள் எல்லோரும் இப்போது புரிந்து கொண்டிருக்கிறோம்

இந்த திட்டம் சார்ந்த என்னுடைய தனிபட்ட கருத்துகளை எடுத்துரைக்க விரும்புகிறேன்.
இந்த கட்டமைப்பினது பிரதான நோக்கம் தமிழர்களினது நியாய பூர்மான வமான அரசியல் கோரிக்கையை வெளி உலகின் உதவியின் ஊடக வென்றேடுப்பதாகும்

அந்த நோக்கத்தின் அடிப்படையில் அதன் கட்டமைப்புகளும் அதன் செயற்பாடுகளும் முன்னெடுக்க பட வேண்டும் இந்த அமைப்பு வன்முறை சாரா ஜனநாயக அடிப்படையில் அமைந்த அமைப்பு என்ற தோற்றப்பாடுகள் வெளி உலகில் தோற்றுவிக்க படுவது முக்கியமானதாகும்

இதற்காக சில விட்டு கொடுப்புகள் செய்ய படுவது அவசியம்.இதில் பிரதானமானது புலிகள் அமைப்பு சார்ந்த அடையாளங்கள் முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்.இதன் கொடியாக புலி கொடி பயன் படுத்த படக்கூடாது மேலும் பிரபாகரனின் படங்களோ அல்லது புலிகள் அமைப்பு சார்ந்த படங்களோ இதன் நிகழ்வுகளிலோ அல்லது ஆவணங்களிலோ இடம் பெறக் கூடாது.

புலி கொடி தமிழனின் கொடி என்று நாங்கள் வாதாடலாம் அல்லது நீதி மன்ற உத்தரவு பெறலாம் ஆனால் பிரச்சனை அதுவல்ல வெளி உலகில் இன்னமும் புலி கொடி புலிகளின் கொடி தான் அவற்றின் அடையாளங்கள் சார்ந்த அமைப்புக்களின் போராட்டங்கள் அதன் அனுதாபிகளால் நடத்த படுவதாகவே அர்த்தப் படுத்த படும்.
இது எங்களின் அரசியல் விடுதலையை நோக்கிய பயணத்தை உலகின் பயங்கர வாதம் என்கிற குருட்டு வாதத்திடம் மீண்டும் பறி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளும்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்ற பூச்சாண்டியை வெளியே காட்டி கொண்டு உள்ளே இலங்கை அரசு செய்யும்நடவடிக்கைகளுக்கான எங்கள் பதில் நடவடிக்கைகள் உணர்ச்சி வசப் பட்டு எடுப்பவைகளாக இல்லாமல் அறிவு பூர்வமானதாக இருக்க வேண்டும். வெளி உலகிற்கு எதை வெளிப்படுத்துகிறோம் என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் இனி வரும் எங்கள் போராட்டங்கள் நண்பர்கள் அற்ற போராட்டமாக இருக்க கூடாது.
அது போல் பிரபாகரனின் படங்களோ அல்லது புலிகள் அமைப்பு சார் படங்களோ இதில் பயன் படுத்த படக் கூடாது இதன் அர்த்தம் அவர்களின் தியாகங்களை புறக்கணிப்போதோ அல்லது அவர்களை கொச்சை படுத்துவதோ என்பதல்ல மாறாக இதன் வருங் கால நடவடிக்கைகளுக்கு அவை தடையாக அமையக் கூடாது என்பது தான். புலிகள் மீதான தடையின் பின்னர் பல நாடுகளிலும் TRO அமைப்பு தடை செய்ய பட்டது குறிப்பிட தக்கது மேலும் இதையே அடிப்படையாக வைத்து இந்த அமைப்பை தடை செய்யு மாறு இலங்கை அரசு எதிர் காலத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.

அவர்கள் (புலிகள்) அடைய நினைத்தை அடைவது தான் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே தவிர அவர்களின் படங்களை வைத்து கொண்டு வெத்து கோசமிடுவதல்ல.

முற்றிலும் புதிதான வன்முறையற்ற ஜனநாயக வழிமுறையில் தங்கள் அரசியல் விடுதலைக்காக போராடும் அமைப்பாக இது உலகெங்கும் அறியப் பட வேண்டும் இதுவே நாங்கள் புதிய நண்பர்களை பெற்று கொள்வதற்கான வழி.

இந்த பொதுமை படுத்த பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளின் நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களில் பங்கெடுத்து அவற்றின் நிர்வாக கட்டைமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் இது வழி வகுக்கும் இது வரை இங்கே(புலத்தில்) தேர்தல்களில் தனி நபர் சார்ந்த முயற்சிகளே இடம்பெற்றன அவை பெரும்பாலோனோரின் ஆதரவு கிடைக்கததால் வெற்றி பெற வில்லை.
அதை விடுத்து விட்டு யதார்த்தங்களை சொல்பவர்களை துரோகிகள்(kp உள்பட) எனப் பட்டம் கட்டுவது எதற்கும் உதவாது உணர்ச்சி வசப் பட்டு குறுகிய கால ஓட்டத்தில் சிந்திக்காமல் அறிவு பூர்மாக நீண்ட காலப் போக்கில் சிந்தித்து செயல் படுவது நல்லது சில விடயங்களை நாங்கள் விரும்பினாலும் வெளி உலகின் பார்வைக்கு வெளிப் படுத்த கூடாது.

தமிழனின் கூடப் பிறந்த குணமான குழி பறிப்புக்களும் குத்துவேட்டுகளும் இல்லமாலும் உலகின் பயங்கரவாத சந்தேகப் பட்டியலிலில் இடம்பெறாமலும்தப்பினால் இந்த அமைப்பு வரும் காலத்தில் ஈழத் தமிழரின் அரசியல் விடுதலையை நோக்கிய பயணத்தில் தன் முத்திரையை பதிவு செய்யும் என்பது எனது நம்பிக்கை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

அவர்கள் என்ன ஆனார்கள்????


பாரத போரின் முடிவில்

கொளரவர்கள் கதை நாயகர்கள் ஆனார்கள்

பாண்டவர்கள் கதா நாயகர்கள் ஆனார்கள்

கண்ண பிரான் கடவுள் ஆனார்

அது சரி இவர்களுக்காக

வெட்டியும் குத்தியும் கொண்டு போரில் மடிந்த

ஆயிரக்கணக்கான மற்ற வீரர்கள் என்ன ஆனார்கள்???

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments